முத்திரை
- விளக்கம்
முத்திரைகளின்
விளக்கம்(1முதல் 35 வரை)
1. குரு
வந்தன முத்திரை
: ஸுமுகம் : விரித்து, பக்க
வாட்டில் சேர்ந்த
இரு கைகளையும்
உள்ளங்கைகள் நம்
முகத்தைப் பார்க்குமாறு
உயர்த்திப் பிடித்தல்.
2. குரு
வந்தன முத்திரை
: ஸுவ்ருத்தம் : ஸுமுக
(1) முத்திரையில் விரல்களை மடக்குதல்.
கட்டைவிரல்கள் மேல்
நோக்கி இருக்க
வேண்டும்.
3. குரு
வந்தன முத்திரை
: சதுரச்ரம் : மேல்
நோக்கியும் கீழ்நோக்கியும்
கைகளை விரித்து
(இடது கை கீழே)
மணிக்கட்டு அருகே
சேர்த்தல்.
4. குரு
வந்தன முத்திரை
: முத்கரம் : கட்டைவிரல்கள்
தன்னை நோக்க, இடது
முட்டி மீது
வலது முட்டியை
வைத்தல்.
5. குரு
வந்தன முத்திரை
: யோனி : இரு
மோதி விரல்களையும், நடுவிரல்களின்
பின்பக்கமாக வளைத்துக்
கொண்டுவந்து, ஆட்காட்டி விரல்களால்
பிடித்துக் கொள்ளவும்; இடது
சுண்டுவிரலை வலது
சுண்டுவிரலால் பிடித்துக்
கொள்ளவும்; கட்டைவிரல் நுனிகளால்
நடுவிரல்களின் நடுப்பகுதியைத்
தொடவும்.
6. குரு
வந்தன முத்திரை
: ம்ருகீ :
இரு கைகளின்
கட்டை விரல், நடு
விரல். மோதிர
விரல்களை மடித்து
நுனிகளைச் சேர்த்து, மற்ற
விரல்களை நீட்டி, தலைக்கு
மேல் பிடித்தல்.
7. அர்க்ய
ஸ்த்தாபன முத்திரை
: மத்ஸ்யம் : வலது உள்ளங்கை
கீழ் நோக்க, இடது
உள்ளங்கை அதனைத்
தாங்க, கட்டை விரல்களை
மட்டும் மீனின்
செதில்களைப் போல்
அசைத்துக் காட்டுதல்.
8. அர்க்ய
ஸ்த்தாபன முத்திரை
: அஸ்த்ரம் : வலது நடு
விரல் மற்றும்
ஆள்காட்டி விரல்களால்
இடது உள்ளங்கையில்
மும்முறை தட்டுதல்.
9. அர்க்ய
ஸ்த்தாபன முத்திரை
: அவகுண்டனம் : கைமுட்டிகளைக்
கீழே காட்டி, வலது
ஆட்காட்டி விரலால்
ப்ரதக்ஷிணமாகவும், இடது ஆட்காட்டி
விரலால் அப்ரதக்ஷிணமாகவும்
இலக்கைச் சுற்றிக்
காண்பித்தல்.
10. அர்க்ய
ஸ்த்தாபன முத்திரை
: தேனு -
அம்ருதீகரணம் : ஒரு
கையின் சுட்டு
விரல் மற்றதின்
மோதிர விரலைத்
தொடவும், ஒன்றின் நடுவிரல்
மற்றதின் ஆள்காட்டி
விரலைத் தொடவும்
செய்வது. (பால்
இறங்கி நிற்கும்
பசுவின்மடி போல்
காணப்படும்.)
11. அர்க்ய
ஸ்த்தாபன முத்திரை
: காலினீ : இடது கை மேல்
நோக்க, வலது கையைக்
கவிழ்த்து, விரல்களை வளைத்துப்
பிடித்தல். இடது
கட்டை விரலும்
வலது சுண்டுவிரலும்
சேர்ந்து காணும்
இடைவெறி மூலம்
விசேஷார்க்யத்தப் பார்க்க
உதவும் முத்திரை.
12. ஆவாஹனாதி
முத்திரை : ஆவாஹனீ
: ஸுமுக (1) முத்திரையில் கட்டை
விரல்களால் மோதிர
விரல்களின் அடிப்பாகத்தை
தொட்டு அசைத்தல்.
13. ஆவாஹனாதி
முத்திரை : ஸம்ஸ்தாபனீ
(ஸ்தபனீ) : ஆவாஹனீ
(12) போலவே கீழ் நோக்கிச்
செய்தல்.
14. ஆவாஹனாதி
முத்திரை : ஸந்திதாபனீ
: கைமுட்டிகளை விரல்களின் நடுப்பகுதியில்
சேர்த்து, கட்டை விரல்களை
மேல் நோக்கிப்
பிடித்தல்.
15. ஆவாஹனாதி
முத்திரை : ஸந்நிரோதினீ
: கட்டைவிரல்கள் உள்ளே
மறைய, மற்ற நான்கு
விரல்களின் நகங்கள்
ஒன்றுக்கொன்று உரச, முட்டிகளைச்
சேர்த்துப் பிடித்தல்.
16. ஆவாஹனாதி
முத்திரை : ஸம்முகீகரணீ
: விரல்கள் மடங்கிய நிலையில், கைமுட்டிகளை
பக்க வாட்டில்
சேர்த்து, நிமிர்த்திப் பிடித்தல்.
17. ஆவாஹனாதி
முத்திரை : வந்தனீ
: கைகூப்பி,
விரல்கள் வளையாது, மார்புக்கு
நேரே வந்தனம்
செய்தல்.
18. ஆவாஹனாதி
முத்திரை : தத்வம்
: மற்ற விரல்கள் நிமிர்ந்திருக்க, இடது
கை மோதிர
விரல் நுனியைக்
கட்டைவிரல் நுனியால்
தொடுதல்.
19. ஆவாஹனாதி
முத்திரை : சின்
முத்திரை (அ) ஜ்ஞாந முத்திரை : வலது
உள்ளங்கை வெளியே
நோக்க, மூன்று விரல்கள்
நிமிர்ந்திருக்க, ஆள்காட்டி விரல்
நுனியைக் கட்டைவிரல்
நுனியால் தொடுதல்.
20. ஆவாஹனாதி
முத்திரை : ஸம்ஹாரம்
(நிர்யாணம்) : இடக்கை
கீழ் நோக்க, அதன்
மேலே வலக்கையினை
மேலே நோக்குமாறு
வைத்து விரல்களைப்
பிடித்துக்கொண்டு அசைத்துக்
காட்டுதல்.
21. நியாஸ
முத்திரை : முகம்
: நான்கு வலக்கை விரல்களால்
உதடுகளைத் தொடுதல்.
22. நியாஸ
முத்திரை : கரசம்புடம்
: ஸம்புடம் போல், கைகளை எதிர்முகமாகக்
குவித்துப் பிடித்தல்.
23. நியாஸ
முத்திரை : அஞ்ஜலி
(நமஸ்காரம்) : இரண்டு
கைகளையும் சேர்த்து, விரல்களை
இணைத்து, பெருவிரல்கள் ஒன்றின்
மேல் ஒன்றாகப்
பின்னியுற வைப்பது.
24. நியாஸ
முத்திரை : ஹ்ருதயம்
: வலக்கையில் நடுவிலுள்ள மூன்று
விரல்களால் இதயப்
பகுதியைத் தொடுதல்.
25. நியாஸ
முத்திரை : சிரஸ்: வலக்கையில் நடு மற்றும்
மோதிர விரல்
நுனிகளால் தலை
உச்சியைத் தொடுதல்.
26. நியாஸ
முத்திரை : சிகை
: வலக்கை கட்டை விரல்
நுனியால் சிகை
(குடுமி) இருக்க
வேண்டிய இடத்தைத்
தொடுதல்.
27. நியாஸ
முத்திரை : கவசம்
: கைகளை மாற்றி, அனைத்து விரல்களாலும்
தோள்களைத் தொடுதல்.
28. நியாஸ
முத்திரை : நேத்ரம்
: வலக்கையின் நடுவிலுள்ள மூன்று
விரல்களால், இரு கண்கள், அவற்றின்
நடுப்பகுதி ஆகியவற்றைத்
தொடுதல்.
29. நியாஸ
முத்திரை : அஸ்த்ரம்
: வலது நடு விரல்
மற்றும் ஆள்காட்டி
விரல்களால் இடது
உள்ளங்கையில் மும்முறை
தட்டுதல்.
30. நியாஸ
முத்திரை : ந்யாஸம்
: வலது கை கட்டை
விரலால் மடங்கிய
மூன்று விரல்களைச்
சேர்த்தபின், ஆட்காட்டி விரலால்
அங்கங்களைத் தொடுவது.
31. நிவேதன
முத்திரை : க்ராஸம்
: மேல் நோக்கும் இடது
கையால், கிண்ணத்தில் அன்னம்
இருப்பது போல்
பாவனையாகக் காட்டுவது.
32. நிவேதன
முத்திரை : ப்ராணன்
: வலது கை நடுவிரலையிம்
ஆள்காட்டி விரலையும்
சேர்த்துக் கட்டை
விரலுடன் பிடித்து, இடக்கையின்
க்ராஸ முத்திரை
மீது நிவேதனம்
செய்வது போல
ஆட்டிக் காண்பித்தல்.
33. நிவேதன
முத்திரை : அபானன்
: வலது கை மோதிர
விரலையும் நடுவிரலையும்
சேர்த்துக் கட்டை
விரலுடன் பிடித்து, இடக்கையின்
க்ராஸ முத்திரை
மீது நிவேதன்
செய்வது போல
ஆட்டிக் காண்பித்தல்.
34. நிவேதன
முத்திரை : வ்யானன்
: வலது கை சுண்டு
விரலையும் மோதிர
விரலையும் சேர்த்துக்
கட்டை விரலுடன்
பிடித்து, இடக்கையின் க்ராஸ
முத்திரை மீது
நிவேதனம் செய்வது
போல ஆட்டிக்
காண்பித்தல்.
35. நிவேதன
முத்திரை : உதானன்
: வலது கை மோதிர
விரலையும் ஆள்காட்டி
விரலையும் சேர்த்துக்
கட்டை விரலுடன்
பிடித்து, இடக்கையின் க்ராஸ
முத்திரை மீது
நிவேதனம் செய்வது
போல ஆட்டிக்
காண்பித்தல்.
-தொடரும்
ஆதாரம்
: ஒன் இந்தியா
நாளிதழ்
0 கருத்துரைகள்:
Post a Comment